Birthday events
Kamal’s birthday is a big day for fans. The social service activities reach their peak on this day. This time around, we have quite a bit of celebration on TV too.
The fans’ association, Kamal Haasan Narpani Iyakkam, is organising a massive blood donation drive, designating November as “Life Saver Month”. 15000 fans will donate blood all over Tamil Nadu.
Meanwhile, Vijay TV, which has always displayed a fondness for Kamal, is coming up with a slew of programmes. One of them is Kamal Kaviyarangam, a literary event featuring poets. It will be conducted by Professor Gnanasambandhan, who is a friend of Kamal. The actual event, which allows free entry, will be held on Sunday, November 4, while the recorded version will be telecast on the birthday.
While it is appreciable to recognise Kamal for what he is, a literary event singing paeans seems to be going a bit overboard. Anyway, fans will have a field day.
[With input from Ananth]


November 3rd, 2007 at 7:16 am
நவம்பர் 7, 1954
பதினொன்றாம் அவதாரம் பரமகுடியில் அவதரித்த நாள்; தமிழ்நாட்டின் திருநாள்.
வைணவனாகப் பிறந்து, ஹாசனாக வளர்ந்து; இந்தியனாக வலம் வரும் எங்கள் “கலை ஞானியே ! ”
சேது மண்டலம் தந்த பரமகுடி பகவானே ! எங்களின் சேது சமுத்திரமே ! கலை உலகில் முத்தெடுக்கும் “சிப்பிக்குள் முத்தே !”
அழியக்கூடிய உடலை தானமாகத் தந்து, இந்த உலகம் உள்ளவரை “அமரனாக” நிலைத்து நிற்கப் போகும் ” மர்ம யோகியே !”
தென்பாண்டிச் சீமையிலே ! தேரோடும் வீதியிலே ! மான் போல வந்தவனே ! கலை மானே ! தென்பாண்டி சிங்கமே, பரமகுடி தந்த “மருத நாயகமே ” !
வரலாறுகள் பல உடைத்தெறிந்த எங்களின் “வாழும் வரலாறே !”
வெறும் “விசிலடிச்சான் குஞ்சுகளாய்” திரிந்த ரசிகர்களை குருவாய் நற்பணியில் திருப்பிய “நற்பணி நாயகனே “! ரசிகர்களின் சத்குருவே !
பகைவனுக்கும் அருளும் “நன்னெஞ்சம்” கொண்ட , “எதிரியையும் நண்பனாக்கி கொள்ளும்” நல் இதயம் படைத்தவரே !
பேரன்பும், பெருங்கருணையும் கொண்டு, ” அன்பே சிவம் ” என்று போதித்த எங்களின் ஆசானே ! “நல்ல சிவமே !” ஆர்வக்கோளாறினால் ” சில “ரசிகர்கள் செயதவற்றை மன்னித்து, மறந்திடுக !!!
திரைக்கதைக்கு உதாரணமாய் “விருமாண்டி”, ஹே ராம் ஆகியவை எழுதி ஹாலிவுட்டை நிமிர்ந்து பார்க்க வைத்த “திரைக்கதை வித்தகனே” ! ரசிகர்கள் வணங்கும் ” ஹே ராமே !!
குட்டையாய், குருடனாய், ‘குணாவாக’, காமேஸ்வரனாக, வேலுநாயக்கராய், யாழ்ப்பாணத்து தமிழனாக தெனாலியாக, அவ்வை சண்முகியாக, அவினாசியாக, பம்மல் சம்பந்தமாக, ரசிகர்களின் நெஞ்சை “ஆளவந்த ” எங்களின் நந்த குமாரா” !
விருதுகளே சலித்துப் போகுமளவிற்கு விருது வாங்கிக் குவித்திருக்கும் “பத்ம ஸ்ரீ” கமலே ! ஆஸ்கார் விருதே உன்னிடம் வருவதற்கு வெட்கப்பட்டுத் தள்ளி நிற்கிறது.
சாத்தியம் என்பது சொல் அல்ல, செயல் !!! என்று தான் சொல்லியவற்றை நிருபிதிது வரும் இயக்குநர் கமலே !!!!
54 வது பிறந்த நாள் கொண்டாடும் ” உலக நாயகனே ” ! வாழ்த்த வயதில்லை, உன்னை வணங்குகிறேன் !
தொடரட்டும் எங்கள் “கலை ஞானியின்” கலைப் பயணம். தொடரட்டும் உனது வெற்றிகள் !
தலைவா ! உனது “நூற்றாண்டுப் பிறந்த நாளை” இந்தப் பிரபஞ்சமே கொண்டாடும் !
சகலகலா வல்லவனே ! கலை ஞானி ! உலக நாயகன் ! “ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு”. எங்கள் ” தசாவதாரம் “, பத்ம ஸ்ரீ , டாக்டர் கமல் அவர்களுக்கு
” பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !!! “.
November 5th, 2007 at 3:23 am
Deities, temples, worship, devotion, dedication, doctorates, titles etc are all typical adulation bestowed on Tamil Film Stars, kamal is no exception. No university awareded doctorates for Brando, De Niro or Pacino. They may have been heralded by peers but was never excessive.
Only if all these energies and efforts are channelled in more meaningful ways, one wishes. Such star-madness is not prevalent anywhere else in the world.
November 5th, 2007 at 3:43 pm
7 th Novermber, 1954.
” ELEVENTH AVATHARAM ” PADMASHRI DR. KAMAL HAASSAN DESCENDED INTO THIS EARTH.
Tamil Nadu got the pride to having a man, who is A REAL HUMAN BEING who donated his body to this MANKIND itself & doing TREMENDOUS amount of WELFARE ACTIVITIES to this SOCIETY.
Only ONE LIVING LEGEND in this UNIVERSE who is the, UNIVERSAL HERO KAMAL HAASSAN’s BIRTH DAY is a REAL CELEBRATION of HIS FANS & also by ALL THE PEOPLE of INDIA.
The ACTING UNIVERSITY of INDIA is entering into HIS 54th YEAR.
Do not ADD YEARS to UR LIFE. But ADD LIFE to YEARS. KAMALJI is an LIVING (LEGEND) EXAMPLE of this. HIS FANS r proud to be HIS FAN & FOLLOWERS.
” SAATHIYAM ENBATHU SOL ALLA , SEYAL ! “. KAMALJI who gave this MOTO which IGNITES UR SELF CONFIDENCE.
SURELY this UNIVERSE will witness & CLEBRATE the 100 th YEAR BIRTH DAY OF ” ULAGA NAYAGAN ” thoughout this entire GLOBE.
“KAMAL JI” ! MAY U LIVE LONG MORE THAN 100 YEARS UPTO 1000 YEARS. THIS IS UR FANS’ WISH.
” HAPPY BIRTH DAY TO ALWARPET ALMIGHTY ”
” HAPPY RETURNS OF THE DAY ” TO ” PARAMAKUDI BAGHAVAN ” KAMALJI !
November 6th, 2007 at 3:13 pm
IndiaGlitz reports…
November 7th, 2007 at 3:33 pm
News and photo on Behindwoods…
November 11th, 2007 at 7:07 pm
Photos from the TV programme from KollywoodToday.com…
November 28th, 2007 at 2:40 pm
Photo of the blood donation event at Chennai 365…
December 1st, 2007 at 10:36 am
கமலஹாசனுக்கு கவியரங்கம்….
தீபாவளிக்கு முதல் நாள் கமலஹாசனுடைய பிறந்தநாளை முன்னிட்டு விஜய் T.Vயில் நடந்த கவியரங்கம்தான் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை காட்டிலும் அற்புதமான நிகழ்ச்சி. கவிஞர்கள் கபிலன், ந.முத்துக்குமார், மனுஷ்யபுத்திரன் , விவேகா பங்கேற்றனர். கவிஞர்கள் கவிதை வாசித்தனர் என்று சொல்வதை காட்டிலும், தங்கள் அழகுத் தமிழால் கமலின் திறமையை வர்ணித்தனர் என்றே சொல்லவேண்டும்.
ந. முத்துக்குமாரின் கவிதை வரிகள் :
கமலஹாசனே கலைகளின் நேசனே
ரத்தத்தில் சிலவகை A+ve, B+ve,O+ve
உனக்கு மட்டும்தான் C+ve..Cinema +ve
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்
உனக்கு மட்டும் நடிகர்களும் ரசிகர்களாக,
நீ பூவாக நடித்தால் வேர்களை பார்த்தபின்தான் வாசனை காட்டுவாய்
நீ தீயாக நடித்தால் வெந்து பார்த்தபின்தான் வாழ்ந்துகாட்டுவாய்
உன் இதழ்கள் முத்த பெட்டகத்தை திறக்கும் சாவிகள்
காதல் இளவரசன,எத்தனையோ நடிகர்கள் காதலித்தார்கள்,
நீ முத்தம் கொடுத்தபோதுதான் விழித்திரை வெள்ளிதிறையானது
நீ குள்ளமாக நடித்தாய், தமிழ் சினிமா உயரமானது,
நீ கிழவனாக நடித்தாய், தமிழ் சினிமா இளமையனாது,
நீ ரூபாய் நோட்டில் கம்பி, பெண்கள் பிரிவில் M.P,
நீ ஒரு கடல், உனக்குள் முக்குளிக்கவரும் ரசிகனும்
முத்தாகவே மாறிவிடுகிறான்,
எல்லா கடலுக்கும் கரையிருக்கும், நீ கரையிலாத கடல்,
அதனால்தான் காலம் உனக்கு கொடுத்தது நரையிலாத உடல். நீ ஒரு மலை,
நாயகனில் நீ அழுதாய் அழுகைக்கு இலக்கணம் பிறந்தது.
உலகம் முழுக்க விசாரித்து பார்தேன் உடல் தானம் செய்த முதல் நடிகன் நீதான்.
இன்றும் திரையாரங்குகளில் கலக்கபோவது யாரு?வேறு யாரு, நீ தான்.
நீ வாங்கிய விருதுகளை அடுக்கினால்
இமயமலை குள்ளமாகிவிடும்,
ஆழ்வார்பேட்டை ஆண்டவா,
ஆஸ்கார் விருது வாங்கிவா.
கபிலனின் கவிதை….
சினிமாவில் இழந்த சினிமாகாகரர் நீங்கள்
அதனால்தான் வருமானவரி கட்டிக்கொண்டே
வாடகை வீட்டில் இருகிறீர்கள்.
நீங்கள் நடிகராக பணக்காரர்,
மனிதனாக ஏழை.
உயர்ந்தவர்கள் ஓய்வு நேரத்தில் ஊட்டிக்கு போவார்கள், உலகம் சுற்றுவார்கள், நீங்கள் ஓய்வு நேரத்தில் உள்ளூர் அறிஞர்களை அழைத்து உரையடுவீர்கள்.
உங்களை குனிந்து பார்த்தால் குழந்தை நட்சத்திரம்,
அண்ணார்ந்து பார்த்தால் ஆகாய நட்சத்திரம்.
நீங்கள் கோவலனாக நடித்திருந்தால்
ஆயிரம் மாதவிகள் ஆசைபட்டிருபார்கள்,
இளங்கோவன் இரண்டாம் பாகம் எழுதியிருப்பான்.
சினிமா தாய்க்கு சிலை வைக்கவேண்டுமென்றால்
ஓளவை ஷண்முகி தான் அடையாள பெண்.
உங்களுக்கு சப்பானியாகவும் நடிக்க தெரியும்
அம்பானியாகவும் நடிக்க தெரியும்
எல்லா உருவங்களையும் செதுக்கிகொள்ளும்
அழகிய மெழுகு பொம்மை நீங்கள்
விவேகாவின் கவிதை….
சிலர் வெளிநாடு போய் படம் எடுக்கிறார்கள்,
சிலர் வெளிநாட்டுப் படத்தையே எடுக்கிறார்கள்,
நீ வெளிநாடுகளோடு போட்டிபோடுகிற படம் எடுக்கிறாய்.
பிடிக்கிற சினிமாவையே எடுத்துகொண்டிருகாமல்,
பிறர் படிக்கிற சினிமாவை எடுக்கிறாய்.
எப்படி படம் பிடித்தாலும் அழகாய் தெரிகிற முகம் உனக்கு,
எப்படி படம் எடுத்தாலும் திருப்தியுறாத குணம் உனக்கு,
எப்படி விழுந்தாலும் எழுந்து நிற்கிற பலம் உனக்கு.
உனது புதுப் புதுப் ‘வேடம்’தாங்களால், இந்த ஆழ்வார்பேட்படையே
கலைஞர்களின் வேடந்தாங்களாய் இருக்கிறது.
தலைக்கு மேல் சுற்றுகிற மின்விசிறியை கூட
ஒளி வட்டம்தான் என்று சொல்லி முக்காடு போட்டுகொள்வார்கள்,
ஆனால் பதக்கங்களின் போதைகளில் மயங்காமல்
புதிய பாதைகளில் புறப்படுகிறாய் நீ..
நிறை மாதம் ஆவதற்குள் பலமுறை வாந்தி எடுக்கும்
ஏழையின் வீட்டு உண்டியலை போல்,
உன் மருதநாயக கனவு நிறைவேறாமல் இருக்கிறது.
உன்னை புத்தகத்தில் இருந்தும் முத்தில் இருந்தும்
யாரும் பிரிக்க முடியாது,
நீ முத்த துணி துவைத்து பெண்களின் கண்ண மொட்டைமாடிகளில்
காயப்போடுகிற அழகை ஊரே ரசிக்கிறது.
இபோதெல்லாம் நீதி கேட்டால் கூட ஜாதி கேட்கிறார்கள்,
நீ பள்ளியில் பிள்ளையை சேர்கையில் ஜாதி கேட்டவனிடம் நீதி கேட்டாய்.
பட அதிபர்கள் சினிமா தயாரிக்கிறார்கள்,
சினிமா நம் நாட்டு முதல்வர்களையே தயாரிக்கிறது,
சினிமா பெட்டிகள் இங்கே வாக்கு பெட்டிகளின் தலைஎழுத்தை தீர்மானிக்கின்றன,
ஊரே பின்னால் இருந்தும் அரசியலுக்கு போகாத ஆச்சரியம் நீ.
சுத்தமானவன் வென்னீரில் குளிப்பவனல்ல வியர்வையில் குளிப்பவன்,
வியர்வை துளிகள் திரவ தீப்பொறிகள் தேகமெங்கும் முளைக்கும் அதிசய சிறகுகள்.
மகேந்திர பல்லவனின் வியர்வை மாமல்லபுரத்தை நிர்மாணித்தது,
புத்த பிட்சுகளின் வியர்வையால் அஜந்தா ஓவியங்கள் அழகுற்றன,
டாவின்சியின் வியர்வை மோனோலிசாவின் முதுகுகளில் உட்கர்ந்துஇருகிறது,
உலக நாயகனின் வியர்வையால் உட்சரிகபடுகிறது உலகத்தில் தமிழ் சினிமா.
புதிய எல்லைகளை தொட ஓடிகொண்டிருகும் உனது புகழ் ஓங்கட்டும்.
அனைத்து கவிதைகளையும் கேட்ட கமல் “கவிஞர்களை நண்பர்களாக வைத்துகொள்வதில் ஒரு சவுகர்யம் என்னவென்றால் அவர்கள் திட்டினால் கூட அழகாக இருக்கும்” என்று அழகாய் சொல்லி நிறைவு செய்தார்.