Home

The end of the screenwriting workshop, not quite…

The Chennai International Screenwriting Workshop drew to a close on June 3. The official Web-site featured a piece providing a round-up and promising photos and videos. It also said that this was just a beginning and more such efforts would happen over time. Kamal’s family was also present for the event.

SivajiTV, IndiaGlitz and IndiaInteracts had videos of a “mini press conference” where Kamal provides a few more thoughts. Kamal even recalled how MGR had inspired him.

More photos can be found at Galatta.com, Behindwoods, IndiaGlitz, Chennai365 (1 | 2) and CineSnacks.com. Shekhar Kapur, who participated in the seminar, went onto blog about it. News reports are available from Sify.com, Thatstamil, ChennaiOnline, Behindwoods, News Today, CineSouth, Dinathanthi and Maalai Malar.

[With inputs from Ananth]

[Picture courtesy: BehindWoods]

[Digg] [Reddit] [del.icio.us] [Facebook] [Technorati] [Google] [StumbleUpon]

5 Responses to “The end of the screenwriting workshop, not quite…”

Comments Feed (RSS) | TrackBack

  1. Hearta says:

    ENTIRE workshop - SUPERB COVERAGE RAND !!

  2. Hearta says:

    I am posting here KAMALJI’S interview to TAMIL magazine KUMUDAM regarding the workshop.

    Rand ! excuse me the content is in TAMIL language.

    “KAMALJI Xclusive” Interview

    “என் முப்பது வருட கனவு !”

    ராஜ்கமல் இண்டர்நே ஷனல் லோகோ பிரிண்ட் செய்யப்பட்ட க்ரே கலர் டிஷர்ட் அணிந்தபடி ஸ்கிரீன் ரைட்டிங் கான்ப்ரன்ஸில் மாணவர்களோடு ஒரு மாணவராக அமர்ந்திருக்கிறார் “பத்மஸ்ரீ” கமல்ஹாசன். கமலைப் பார்த்தபடி கான்ப்ரன்ஸ் ஹாலில் நூற்றுக்கணக்கான மாணவர்களோடு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகள் க்ருத்திகா உதயநிதி, கமலின் இளைய மகள் அக் ஷரா, ரமேஷ் அரவிந்த் உட்பட சில முக்கியமான வி.ஐ.பி.களும் சின்ஸியராக குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    வகுப்பு முடிந்ததும் தனது ஸ்கிரீன் ரைட்டிங் கமாண்டோக்களான அஞ்சும் ராஜ்பாலி, அதுல் திவாரி, ஹரிஹரன் ஆகியோருடன் மறுநாளைய க்ளாஸ் பற்றி கலந்துரையாடிய பின் மீண்டும் தொடர்கிறார் கமல்ஹாசன்.

    “நான் இந்த ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சிக் களத்தை ஆரம்பிக்க காரணம், இது என் 30 வருட கனவு. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் சினிமாவிற்குள் நுழைந்தபோது கதை, திரைக்கதை மீதான தாகத்தைத் தீர்த்துக் கொள்ள, அதை நன்கு புரிந்து கொள்ள எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். என்னால் எதுவும் முடியவில்லை.

    பல ஆங்கிலப் படங்களைப் பார்த்தேன். ஒவ்வொரு ஆங்கிலப் படத்தையும் 6 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஆனாலும் என்னால் முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாமல் போனது.

    இந்த நேரத்தில் தான் அதிர்ஷ்டவசமாக மறைந்த அனந்து அவர்களைச் சந்தித்தேன். சினிமாவில் திரைக்கதை எழுதும் விதத்தை எனக்கு மட்டுமில்லாமல், என்னைப் போல் பலருக்கும் கற்றுக் கொடுத்தவர் அனந்து அவர்கள். மற்றவர்கள் எல்லோரும் தங்களுக்குத் தெரிந்த அந்த வித்தையை பெரும் ரகசியமாகவே பாதுகாத்து, யாருக்கும் சொல்லிக் கொடுக்காமல் இருந்தார்கள். ஒரு பையனாக, மாணவனாக நான் இந்த வித்தைகளைக் க்ற்றுக் கொள்ள நினைத்தபோது, ஒருவரும் முன்வந்து பேசவும் இல்லை; கலந்துரையாடவும் விரும்பவில்லை. ஆனாலும் எனக்குள் இருந்த ஆர்வத்தை விட்டுக் கொடுக்க முடியாமல், புத்தகங்களை இன்னும் அதிகம் படிக்க ஆரம்பித்தேன். டாஸ் கேபிட்டல் உள்பட பல புத்தங்களைப் படித்தேன். தூக்கத்தோடு படித்த அனுபமும் எனக்குண்டு.

    இப்படி நான் இழந்த பல விஷயங்களை, தனனால் முடியாத விஷயங்களை, கல்வியை தன்னுடைய குழந்தையாவது பெற வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் கடினமாக உழைத்து படிக்கவைக்க முயல்வது போன்ற உணர்வுடன் நானும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். இந்த முயற்சியை, என் கனவை நனவாக்க கிடைத்தவர்கள்தான் அஞ்சும் ராஜ்பாலி, அதுல் திவாரி, ஹரிஹரன்.

    பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஸ்கிரீன்ரைட்டிங் என தனியான ஆசிரியர் இல்லாததை நினைத்து, அதற்காக போராடிய ஒரு போராளி ஆசிரியர் இந்த அஞ்சும் ராஜ்பாலி. கடினமானதாகத் தோன்றும் சூட்சுமங்களை எளிமையாக கற்றுக் கொடுப்பவர். தற்போது விஸ்லிங் வுட்ஸ்ஸில் பணியாற்றுகிறார்

    அதுல்திவாரி நே ஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்தவர். கதை மட்டுமலலாமல் திரைக்கதை, மொழிபெயர்ப்பு என எல்லாவற்றிலும் தேர்ந்தவர்.

    ஹரிஹரன் பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து கற்று வந்தவர். பிலிம் மேக்கர். மிக கடினமான இந்தத் துறையில் அதிகம் முயற்சித்தவர். பிரசாத் அகடமியில் பல வல்லுநர்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர்.

    இப்படி எங்கள் எல்லோருடைய கனவும் இவ்வளவு அருமையாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சியால் என் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேருகிறதா இல்லையா என்பது அர்த்தமில்லை. இதன் மூலம் பெரும்பணம் சம்பாதிக்கப் போகிறோமோ என்பதும் இல்லை. நாங்கள் எடுத்த இந்த முயற்சியின் பலனாக மூன்று பேர் ஸ்கிரீன் ரைட்டிங்கில் நம்பிக்கையூட்டினாலும் அது போதும்.”

    கேள்வி: ஒரு தனி மனிதரால் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் எல்லாம் சாத்தியமாகும் என நினைக்கிறீர்களா?

    கமல்ஜி பதில் :

    ஒரு தனிப்பட்ட ஒருவரிடமிருந்து வெளிப்படும் சக்தியானது. பல பேரிடமிருந்து வெளிப்படும்போது எதுவும் நடக்கும். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஒரே மாதிரியான படங்கள்தான் வெளிவந்தன என்று கூறுபவர்களும் உண்டு. அதில் உண்மை இல்லை. அந்த நேரத்தில்தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘என்னதான் முடிவு’ படத்தை எடுத்தார். இந்தப் படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அது எனக்குள் ஒரு விதையை விதைத்தது. அந்த விதைதான் ‘என்னதான் முடிவு’ படத்தைப் போன்று ஏறக்குறைய ஒரே வரி கதையம்சம் உள்ள “ஹேராம்” படத்தை எடுக்கத் தோன்றியது.

    “என்னதான் முடிவு” படம் சிறிய படமாக இருந்தாலும், அதன் மூலம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அந்த மாதிரியான முயற்சியில் இறங்கினார். அதேபோல் ஜெயகாந்தன் முயற்சித்தார். ருத்ரய்யா ‘அவள் அப்படித்தான்’ மூலம் முயற்சித்தார். பிறகு நாங்களும் முயசித்தோம். அதனால் இதற்கான முயற்சிகள் இன்றும் தொடர்கிறது.

    கேள்வி: சில நேரங்களில் நம்முடைய திரைப்படங்கள் ஒரு முழுமையைத் தொடுவது இல்லையே அது ஏன் ?

    “விருமாண்டி” படத்தில் ஒரு வயதான அம்மா நாயககர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அவருக்கு வயது 80க்கும் மேல். விருமாண்டிதான் அவருடைய முதல் படமும் கூட. இவ்வளவு இருந்தும் அவருடைய கதாபாத்திரம் இன்றும் நம் நினைவில் நிற்கிறது. உண்மையில் நமக்கு பல தேவைகள் இருக்கின்றன. இருந்தும் நாம் தமிழ்சினிமாவிற்கான genre தொடுவது கூட இல்லை. இதற்குக் காரணம், டிஸ்டிரிபியூட்டர்கள் மற்றும் எக்ஸிபிட்டர்கள் எல்லோரும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

    கமர்கட் மட்டுமே சாப்பிடுவது இல்லை. அதேபோல் எல்லோருமே காட்பரீஸ் சாப்பிடப் போவது இல்லை. எல்லோரும் மட்டன் பிரியாணி சாப்பிடப் போவது இல்லை. சாய்ஸ் படி… அப்படியே மட்டன் பிரியாணி சாப்பிடுபவராக இருந்தாலும், இன்றைக்கு எனக்கு இட்லி என்றால் மார்க்கெட்டில் இட்லி இல்லை (மனம் விட்டுச் சிரிக்கும் கமல் சொன்ன பஞ்ச்).

    தமிழில் கூட ஒரு பழமொழி இருக்கிறது. “நீங்கள் ஒருவருக்கு உதவவேண்டுமென்றால் மீன் வாங்கிக் கொடுக்காதீர்கள். தூண்டில் வாங்கிக் கொடுங்கள்” என்ற பழமொழிக்கேற்ப தான் நாங்கள் ஒரு முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறோம்.”

    நன்றி : குமுதம், 10.06.2009

  3. randramble says:

    Thanx Hearta! But the credit should go to contributors like Ananth, Ravages and Deepauk! Anyway, there’s more to come…

  4. Hearta says:

    Rand !

    KAMALJI ‘Big Photo’ is rocking !!

    I think after nearly 2 years, the BIG “NAMBI” still is replaced by NEW STANDING still of KAMALJI. This still is natural & smily.

    Which occasion this photo clicked ?

  5. randramble says:

    Thanx, Hearta. It may seem like 2 years :), but the last image was put up only just before Dasavathaaram release, which is a year ago. The graphics work is done by Santhosh — so, thanx to him. This photo was clicked when Kamal visited the sets of Jaganmohini in Ramoji Film City near Hyderabad.

Leave a comment

E-mail address never displayed
Some HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>